Please Subscribe to Our Whatsapp Channel in the link below<br /><br />https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a<br /><br />Please Visit and Subscribe to our YouTube Channel through the link below<br />https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w<br /><br />Join this channel to get access to perks:<br />https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join<br /><br />பாடல் ஆசிரியர் - பேரா. சொ அரிய நாயகம்<br /><br />ஈச்சனாரி சோலைக் குள்ளே எழில் மணக்குது!<br />தெய்வ எழில் மணக்குது!<br /><br />என் இதயத்திலே வேலமுகம் கனி கொடுக்குது.<br />அருள் கனி கொடுக்குது! <br /><br />தமிழ் பூச்சொரியும் தேன் எடுத்து கவி தொடுக்குது.<br />இதய கவி தொடுக்குது.<br /><br />சிவ போதத்திலே அன்பு மனம் செவி மடுக்குது.<br />இன்ப செவி மடுக்குது!<br /><br />ஐந்து கரப் பிள்ளையிடம் ஆசை பெருகுது.<br />நெஞ்சில் ஆசை பெருகுது!<br /><br />அவன் அழகு விழி அருவியிலே சுடர் வருகுது.<br />அறிவுச் சுடர் வருகுது.<br /><br />எங்கும் தந்த மலர் சேவடியில் <br />கருணை பருகுது!<br />மனம் கருணை பருகுது.! <br /><br />அந்த களிப்பிடையே எனைத் தொடரும் இருள் விலகுது.!<br />பிறவி இருள் விலகுது! <br /><br />ஔவைக்கு அருள் செய்ததற்கு என்ன காரணம்!<br />அது என்ன காரணம்!<br /><br />அவள் அமுது அருந்தி மயங்கியதோ இந்த பூரணம்!<br />நம் சொந்த பூரணம்!<br /><br />இன்று செவ்வையுடன் கட்டி வைத்தேன் நெஞ்சில் தோரணம்!<br />என் நெஞ்சில் தோரணம்!<br /><br />மனித சேவை செய்ய வந்திடுமோ இனிய வாரனம்! <br />நம் புனித வாரனம்!